சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இராஜினாமா

சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

டிக்கிரி கொப்பேகடுவவை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக நியமித்திருந்தார்.