ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் – சபா குகதாஸ்

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் தரப்பை ஒற்றுமையாக வாருங்கள் கேலி செய்யும் விதமாக தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினன் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்திகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிர் காலத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் கடந்த காலத்தில் பலர் விட்ட தவறுக்கு நடந்த வரலாற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணத்தில் எதிரிக்கு சாதகமாக பிளவினை ஏற்படுத்துவது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பு என்பது ஆயிரக்கணக்கான மாவீரர்களின் உயிர்த் தியாகத்தாலும் தன்நிகர் அற்ற தலைவனின் வழி காட்டலினாலும் உருவாக்கப்பட்டது இத்தகைய தியாகத்தை பயன்படுத்தி பதவிகளை பெற்ற சிலர் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஒற்றுமையை சீர்குலைப்பதை தமிழ் மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள்.

சிங்கள் ஆட்சியாளர்கள் ஒற்றுமையாக வாருங்கள் என தமிழர் தரப்பை பார்த்து கேலி செய்யும் போது தொடர்ந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் வகையிலும் தமிழர் தரப்பே இருப்பது மிக வேதனையாக உள்ளது இதற்கான பதிலடி எதிர்காலத்தில் கிடைக்கும்  என குறிப்பிட்டுள்ளார்.