சீனக்கப்பல் மேலும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்க அனுமதி

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலான “ஷி யான் 6″ மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சனிக்கிழமை பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவிருந்தது.

இந்தநிலையில், நாளை மறுதினம் வரை குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.