டொலரை விட ரூபாயின் பெறுமதி அதிகரிப்பின் அமெரிக்கா இலங்கை மீது குண்டு வீசும்

அமெரிக்க டொலரை விட இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்தால், அமெரிக்கா எம்மீது குண்டுகளை வீசும் என தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொருட்களில் விலை குறைவடைவதாக கூறினால் கடந்த வருடம் காணப்பட்ட விலைக்கு குறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி குறையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னர் 33 ரூபாய்க்கு காணப்பட்ட சவர்க்காரத்தின் இன்றைய விலையை ஒப்பிட்டு பார்க்கையில் விலை குறைந்துள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.