யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகர சபைக்கே; பதில் முதல்வர் ஈசனிடம் இந்திய துணைத்தூதுவர் வாக்குறுதி

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய கட்டிடத்தொகுதி யாழ் மாநகர சபைக்கே வழங்கப்படுமென இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தன்னிடம் வாக்குறுதியளித்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாநகர பதில் முதல்வர் துரைராஜா ஈசன் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் நேற்றைய தினம் இந்திய துணைத்தூதரகத்தில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அரை மணிநேரத்துக்கு மேலாக சந்தித்து கலந்துரையாடி குறித்த வாக்குறுதியை பெற்றேன் என்றார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோதே பிரதி முதல்வர் து.ஈசன் இதனை தெரிவித்தார்.

குறித்த விளக்கத்தில், கலைகள் கலாசாரம் திட்டமிட்டு அழிக்கப்படும்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் போன்ற கட்டிடத்தொகுதி யாழ் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றார்.