பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரிசி : செல்வம் எம்.பி அரச அதிபருக்கு கடிதம்

இந்தியாவின் தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் தொடர்பில் தகவல் கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வவுனியா அரசாங்க அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.

இவ்விடயத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.