புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு சட்டமா அதிபர் ஒப்புதல்

பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று (27)  கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பங்கரவாத தடைச்சட்டத்தை மீள் கட்டமைப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய, புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.