புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இயக்கத்தின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைலரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான தோழர் இராகவன் அல்லது ஆர்.ஆர் (வேலாயுதம் நல்லநாதர்) வியாழக்கிமை (22) இயற்கை எய்தினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இணந்திருந்து – தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை முழுமையாக அர்ப்பணித்த ஒரு மூத்த போராளியே ஆர்.ஆர் ஆவார்.

அவரது உடலுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

ஆர்.ஆர். இன் வித்துடலுக்கான வணக்க நிகழ்வுகள் -16 ஹேக் வீதி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சனிக்கிழமை (24) காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து, வவுனியா கோவில் குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 8 மணி தொடக்கமும் நடைபெறும்.

பின்னர், முற்பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்விகள் நடைபெற்று ஆர்.ஆர். இன் வித்துடல் வவுனியா கோவில்குளத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.