பெளத்த ஆலயங்களில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன – விலங்கு நல அமைப்பு கவலை

இலங்கையின் அளுத்கம கந்தே விகாரை முத்துராஜவை ( யானை) தீவிரபௌத்தனாக மாற்றுவதற்கு தன்னால் முடிந்தளவிற்கு முயற்சி செய்தது என தெரிவித்துள்ள ரார்ஸ்ரீலங்கா அமைப்பு இதன் விளைவாக கால்முறிந்தது அதன் கால்பாதங்கள் பாதிக்கப்பட்டன காயங்கள் ஏற்பட்டன நூற்றுக்கணக்கான தாக்கப்பட்ட காயங்கள் – சங்கிலிகள் போன்றவற்றால் ஏற்பட்டவை காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இது ஒரு சம்பவமே எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற 90க்கும் மேற்பட்ட யானைகள் பௌத்தஆலயங்களில் துன்பத்தில் சிக்குண்டுள்ளன,இந்த ஆலயங்களின் செல்வந்த அதிகாரம் மிக்க முதலாளிகள் அவற்றை திருவிழாக்களின்போது ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முத்துராஜ என அழைக்கப்படும் சக்சுக்ரின் தனது கூட்டில் காணப்படுகின்றார் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் தனது பௌத்த இராஜதந்திரியை தாய்லாந்து மீளப்பெறுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யானைகளை பௌத்த ஆலய உற்சவங்களின் போது ஊர்வலமாக அழைத்துச்செல்வதை நிறுத்தவதற்கு இது ஒரு சிறந்த காரணம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு தாய்லாந்து மக்களின் அழுத்தம் காரணமாகவே சக்சுக்ரின் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டது ஆனால் ஏனைய ஐந்து யானைகளின் நிலைமை என்ன குறிப்பாக மியன்மாரை சேர்ந்த ஐந்து யானைகளின் நிலைமை என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளது.