பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்தவுடன் வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் வெற்றி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பரில் பணவீக்கம் 61 சதவீதமாகவும், டிசம்பரில் பணவீக்கம் 57.2 சதவீதமாகவும் குறைந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி விகிதங்கள் காரணமாக பணவீக்கத்தை குறைந்த மட்டத்தில் வைத்திருக்க முடிந்துள்ளதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்தவுடன் வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும் என நம்புவதாகவும், இந்த ஆண்டு வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.