மஹிந்த பிரதமராவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது – மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தை கலைத்து விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை கோருவதாக நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிற நிலையில் அவரை பிரதமராக நியமிப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என கூறியுள்ளார்.

ஆனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துங்கள் என்றும் அதற்கான அரசாங்கத்தை அமைக்க தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் மூலமே மக்களின் ஆணை யாருக்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.