வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜாவும் கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் வயம்ப ஆளுநராக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்த்க்கது.