முல்லைத்தீவில் ஓ.எம்.பி அலுவலகம் விசாரணையை முன்னெடுக்க முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள காணாமல் போனாருக்கான அலுவலகம், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 244 பேருக்கு விசாரணைக்கான அழைப்பையும் விடுத்துள்ளது. எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் விசாரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.