யாழ்.நாவற்குழி விகாரைக்கு வரும் சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கும் வகையில் நாளைய தினம்(சனிக்கிழமை) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.

நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சவேந்திர சில்வா இவ்வாறு வருகை தரவுள்ளார்.

சவேந்திர சில்வா வருகை தரும் நிகழ்விற்காக தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த நிகழ்வுகள் நாளை காலை முதல் பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.