ரெலோவின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக விஜயகுமார் நியமனம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக ஆ.விஜயகுமார் (சாள்ஸ்) நியமிக்கப்பட்டுள்ளார்,

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) தனது 11 மாநாட்டை நடாத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது அதற்கு அமைவாக திருகோணமலை மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் திருகோணமலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மற்றும் கட்சியின் மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிர்வாகத் தெரிவில் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக தொழிலதிபரும் சமூக சேவையாளருமான ஆ.விஜயகுமார் (சாள்ஸ்) தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் துணை மாவட்ட அமைப்பாளராக சமூக சேவையாளர் தி.பிரபாதரன் தெரிவாகியதுடன் 17 பொதுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.