90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன

எதிர்வரும் 19ஆம் திகதியன்று ஏல விற்பனையினூடாக 90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91நாட்களில் முதிர்வடையும் 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்படவுள்ளன.

மேலும் 364 நாட்களில் முதிர்வடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.