இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் குறித்து எந்த கவலையுமில்லை – அனுரகுமார

இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்தது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தான் அழைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவாகயிருக்கலாம் என்பதை தெரிவித்துள்ள ஜேவிபி தலைவர் தேசியபாதுகாப்பு பொறுப்புணர்வுமிக்க பூகோள அரசியல் ஆகியவற்றிற்கான ஜேவிபியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா தனது கட்சியை அழைத்தமைக்கான காரணம் என்னவாகயிருக்கலாம் என்பது குறித்து கருத்துதெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க இலங்கையின் தற்போது காணப்படும் நிலைமை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபியை இந்தியா அழைத்ததை பாரம்பரிய செயற்பாடுகளில் இருந்து ஒரு மாற்றம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் புவிசார்அரசியல் நலன்களிற்கு எதிராக இலங்கை பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைஅரசியலை உன்னிப்பாக அவதானிக்கின்றது என ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி துருவமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் தேவைகளிற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை எந்த தேசத்துடனும்இணைந்துசெயற்படுவதற் ஜேவிபி தயாராகவுள்ளது எனவும் தெரிவிததுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும்; வரலாற்றுரீதியாகமுரண்பாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் நாடுகளும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும் குறிப்பிடத்தக்க மாற்றமடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறைப்பதற்கு எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராகஇலங்கையின் தேசிய பாதுகாப்பே இந்தியாவின் கரிசனைக்குரிய விடயம் எனவும்தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் குறித்து எந்த அச்சமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த அனுர குமார

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக அனுரகுமார தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.

ஜுன் 8 முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்தக் கோரி போராட்டம் – அனுரகுமார

உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஜூன் 8 ம் திகதி முதல் மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் 8ம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா அம்பாந்தோட்டை அனுராதபுரத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் இறுதியாக கொழும்பை சுற்றிவளைப்பதற்கான மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் மக்களிற்கும் நாட்டிற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளனர் 68 வீதமான மக்கள் உணவு உண்பதை குறைத்துக்கொண்டுள்ளனர் என்பதை மத்திய வங்கியின் சமீபத்தைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 வீதமானவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர் மேலும் நாற்பது வீதமானவர்கள் கல்விச்செலவுகளை நிறுத்திவிட்டனர் எனவும் மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 500,000 தொழிலாளர்கள் தங்கள் தொழில்களை இழந்துள்ளனர் பெரும்பான்மையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை மக்கள் வாழக்கூடிய நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி அந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு முதல் ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் அதற்கு முன்னர் உள்ளுராட்சி மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இனவாதம்,மதவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் – அனுர குமார

மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம்,மதவாத கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் குறிப்பிட்ட கருத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் மக்கள் விடுதலைக்கான மக்கள் அலை குறைவடைந்துள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டமும் முடிவடைந்து விட்டது என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.

மக்கள் கூட்டத்தால் மக்கள் முன்னணி தோற்றம் பெறவில்லை.மக்களின் நம்பிக்கையை கொண்டு மக்களாதரவை தற்போது ஒன்றுத்திரட்டியுள்ளாம்.எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைவடைய செய்ய மாட்டோம்.

வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இயற்றை அனர்த்தத்தினால் நாட்டு மக்களுக்கு இந்த நிலை ஏற்படவில்லை.அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இந்த நிலையை இனியாவது மாற்றியமைக்க வேண்டும்.நாட்டுக்கு பொருத்தமான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் மொத்த சனத்தொகையில் 68 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இரு வேளையாக குறைத்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய மருந்து கொள்வனவை புறக்கணித்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய தேவைகளை வரையறைத்துள்ளார்கள்.ஆகவே பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கும்,சமூக கட்டமைப்பின் உண்மை தன்மைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

பொருளாதார பாதிப்பு காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.இதனால் சமூக விரோத செயல்கள் தீவிரமடைந்துள்ளன.ஒரு நாடு பொருளாதார பாதிப்புக்கு முகம் கொடுக்கும் போது சமூக விரோத செயற்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறும்.பிரேசில் நாட்டிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது.

யுத்த காலத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதை போன்று பொருளாதார அநாதைகளாக மக்கள் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக இரவு பகலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.2021 ஆம் ஆண்டு 13 இலட்சம் பெண்கள் வெளிநாட்டு பணி பெண்களாகவும்,2022 ஆம் ஆண்டு 74 இலட்சம் பெண்கள் பணி பெண்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.இதுவே சமூக கட்டமைப்பின் தற்போதைய நிலை.ஆனால் ஜனாதிபதியோ சுபீட்சமான எதிர்காலம் என்று பொருளாதாரத்தை முன்னேற்றி விட்டதாக கருத்து தெரிவித்து தன்னை காட்சிப்படுத்தி உலகத்தை வலம் வருகிறார்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.வெளிநாட்டு அரச முறை கடன்களை செலுத்தல்,டொலர்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தல்,அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி ஆகிய மூன்று காரணிகளுக்காகவே டொலர் அத்தியாவசியமானது.

அரசாங்கம் இந்த மூன்று செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளது.ஆகவே டொலர் கையிருப்பு மிகுதியாகும்.அதை கொண்டே எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.ஆகவே இது நிலையான பொருளாதார தீர்வு அல்ல பெற்றுக்கொண்ட அரசமுறை நிச்சயம் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடித்தார்கள்.மக்களால் வெறுக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.ஜெரோம் பெர்னாண்டோ என மதபோதகர் குறிப்பிட்ட கருத்து தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

இவர் பல முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.அப்போது எவரும் கவனம் செலுத்தவில்லை.களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக குறிப்பிட்ட ஊடகங்கள் இவர் விடயத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல ஆகவே மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

தவறான அரசியல், பொருளாதார கொள்கைகள் நாட்டுக்கு வினையாக மாறியுள்ளது – அனுர குமார

அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும் எதிர்வினையாக மாறியுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராகவுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் சனிக்கிழமை (5) மாலை இடம்பெற்ற கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்க வேண்டும்.ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்களே மாற்றியமைக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டு நாட்டு மக்கள் தவறான அரசியல் நிர்வாகத்தை, தவறான தலைவர்களை தெரிவு செய்தார்கள். தெரிவு செய்யப்பட்ட தலைவர் தவறானவர் என மீண்டும் மீண்டும் தவறான தலைமைகளையே தெரிவு செய்கின்றார்கள் .

தற்போதைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்னைய அரசாங்கங்களிலும் பதவி வகித்துள்ளார். ஆகவே எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இவ்வாறு சகல அரசாங்கங்களிலும் அமைச்சு பதவி வகித்துள்ளார்.ஆகவே உண்மையான அரசியல் மாற்றம் இடம்பெறவில்லை.

உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் பொருளாதார கொள்கை மாற்றியமைக்க வேண்டும்.

வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளோம்.கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது,பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.