இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த அனுர குமார

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக அனுரகுமார தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.