முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைப் போன்ற சட்ட மூலத்தை அமெரிக்காவும் அமுல்படுத்த உள்ளது – பாலித ரங்கே பண்டார

தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபும் மாவட்ட சம்மேளனம் வியாழக்கிழமை (01) அனுராதபுரம் இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் தலை தூக்கும் என யாரும் நினைக்கவில்லை.

என்றாலும் 2001இல் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் பிரதமரானார்.

அதன் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இன்று நாட்டின் பிரதான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு முழு உலகுக்கும் தெரியும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி, அவரை பிரதமராக்கி, ஜனாதிபதியாக்கியது போன்று அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக நியமித்தே தீருவோம். அதுதொடர்பில் சந்தேகம் கொள்ளவேண்டாம்.

ஏனெனில் விழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங் மாத்திரமே முன்வந்து, நாட்டை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தார். அதனால் எங்களையும் நாட்டையும் மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை.

அத்துடன் நாட்டை மீட்கும் இந்த பயணத்தை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும்போது ராஜபக்ஷ்வினரை பாதுகாக்க செயற்படுவதாக எங்களை விமர்சிக்கின்றனர். ராஜபக்ஷ்வினரை மாத்திரமல்ல, அனைவரையும் இணைத்துக்கொண்டு முழு நாட்டு மக்களையும் பாதுகாக்கவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார்.

என்றாலும் திருடர்களை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவோ ஐக்கிய தேசிய கட்சியோ தயாரில்லை. திருடர்களுடன் பாராளுமன்றத்தில் இருப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம் செய்துவருகிறார். ஆனால் ரணில் விக்ரமசிங்க திருட்டை ஒழிக்க தேவையான சக்திவாய்ந்த சட்ட திடடங்களை கொண்டுவந்திருக்கிறார்.

அதேபோன்று நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

ஆனால் சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மாறாக யாருடைய உரிமையையும் மீறவில்லை. அமெரிக்காவில் இன்று அதிகரித்துவரும் கொலை, தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது.

எனவே ஆளுமையும் அனுபவமும் உள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே இந்த நாட்டையும் மக்களையும் மீள கட்டியெழுப்ப முடியும்.

அதனை கடந்த ஒன்றரை வருட காலத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளினால் வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

பொதுமக்களின் வரிச்சுமைகள் குறைக்கப்பட வேண்டும் – ரவி கருணாநாயக்க

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

திவால் நிலையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே வரிகளை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே வரி செலுத்தி வருபவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் வரி வலையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சஜித்தால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது – ஹரின்

“சஜித் பிரேமதாஸவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. இதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டார்கள். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.”

– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமோக வாக்குகளால் வெற்றியடைவார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளின்  உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார்கள்.” – என்றார்.

இனவாதம் மதவாதத்தை தூண்டுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் – வஜிர அபேவர்தன

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம்.

ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. ஆனால் இவர்கள் இனவாதம். மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாடு தற்போது படிப்படியாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. சரவதேச நாணய நிதியம் நேற்று விடுத்திருந்த குறிப்பொன்றில், செப்டேம்பர் 15ஆம் திகதிக்கும் 27ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் இலங்கைக்கு வந்து, வங்குரோத்து நிலைமையில் இருந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதனால் ஊடகங்கள் நாட்டின் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மை தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஏதாவது வழி இருந்தால்.

கடந்த மே மாதம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள கிடைப்பதும் இல்லை. ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள கிடைக்கப்பதில்லை.

அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த வழியும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவானதொரு வழி இருந்தமையாலே அவர் முன்வந்து நாட்டை பொறுப்பேற்றார்.

அத்துடன் நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்து இன மக்களும் ஒன்றாக இருந்து செயற்பட்டதுபோல் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும் நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்துக்காக ஒன்றிணைந்து செயற்பட்டாலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் காலத்துக்கு காலம் தேர்தல்களின் போது பொய் வாக்குறுதிகளை வழங்கி அதனை செயற்படுத்த முற்பட்டதன் பிரதிபலனாகவே இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட காரணமாகும்.

மேலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்துக்கு வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார்.

பொருளாதாரம் ஸ்திரமடையும் நிலை ஏற்படும் போது இனவாதத்தை தூண்டி, ஆட்சியை வீழ்த்தும் நடவடிக்கை 2000ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்று வந்திருக்கிறது. அதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் அதனை எவ்வாறு மீட்கமுடியும் என்பதையும் அரசியல் அனுவத்தால் ரணில் விக்ரமசிங்க தெரிந்து தெரிந்து வைத்திருக்கிறார்.

அதனால் தான் 2000ஆம் ஆண்டில் நாடு வீழ்ச்சியடையும்போது 2001 டிசம்பர் மாதம் நாட்டை பொறுபேற்று, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னுக்கு கொண்டு சென்றார்.

ஆனால் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் 2014 ஆகும்போது நாடு பொருளாதார ரீதியில் மீண்டும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

அதனால் 2017இல் நடத்த இருந்த ஜனாதிபதி தேர்தலை 2015இல் நடத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார்கள். என்றாலும் 2015 ஜனவரி 8ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டை பொறுப்பேற்று, நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவந்தார். இந்நிலையில்தான், உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்து 2019இல் 52 நாள் கலவரம் மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வரை இடம்பெற்றது.

எனவே நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

ஆனால் இவர்கள் இனவாதம். மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.

அதனால் அனைவரும் இலங்கையர்களாக எமது பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேசிய ஐக்கியம் முக்கியமாகும் என்றார்.

அதிகாரத்தை கைப்பற்ற சில குழுக்கள் முயல்வதாக ருவான் விஜயவர்தன குற்றச்சாட்டு

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த சில குழுக்கள் முயல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்திருந்தவேளையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் ஜே.வி.பியின் தலைவருக்கும் பிரதமர் பதவியை வழங்க முன்வந்தார்.

ஆனால் அனைவரும் அதனை ஏற்க மறுத்தனர் . ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் அதனை ஏற்றுக்கொண்டு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார்,

எனினும் எதிர்க்கட்சி உட்பட சில குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அத்தியாவசிய சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சிறைத்தண்டனை: மிரட்டும் ஐ.தே.க தேசியப்பட்டியல் உறுப்பினர்

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் (1979 ஆம் ஆண்டு இலக்கம் 61) குற்றமிழைக்கும் ஒவ்வொரு நபரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்து, விசாரணையின் மூலம் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் கடூழிய சிறைத்தண்டனை அல்லது 2000 ரூபாய்க்குக் குறையாத ஐயாயிரம் ரூபாவுக்கு மிகாத அபராதம் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அந்த அபராதம் ஆகிய இரண்டும் விதிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த குற்றத்தை செய்பவர் பணிபுரியும் உரிமையை இழக்க நேரிடும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 7ஐ மேற்கோள் காட்டி வஜிர அபேவர்தன குறிப்பிடுகையில், “இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்காக ஒரு நபருக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கு தொடங்கப்பட்டால், அவர் ஒரு தொழிற்சங்கத்தால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதில் அவர் இணைந்தார் என்பது ஒரு மன்னிப்பிற்கான காரணமாக அமையாது” என்றார்.

தொழிற்சங்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை எதுவாக இருந்தாலும், அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் விதிகளுக்கும் அத்தகைய பிற எழுதப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு அல்லது பிற முரண்பாடுகள் ஏற்பட்டால், அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் விதிகள் மேலோங்கும் என தெரிவித்தார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

வர்த்தமானி அறிவிப்பில் கையொப்பமிட்டு, ஜனாதிபதி பொது போக்குவரத்து சேவைகளை பயணிகள் அல்லது பொருட்கள், இறக்குதல், வண்டி, இறக்குதல், சேமிப்பு, விநியோகம் மற்றும் உணவு மற்றும் குளிர்பான பொருட்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருளை எந்தவொரு துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து அகற்றுவதற்கு பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாறியுள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டார்.

சுங்கச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சாலை, பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் இரயில்கள், வான்வழி போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வஜிர அபேவர்த்தன மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமானதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராகினார்.

சில கடுமையான தீர்மானங்களை எடுக்க சர்வதேச நாணய நிதியமே காரணம் – ருவன்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே வரி அதிகரிப்பு உட்பட சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வங்குராேத்து நிலைமையை அறிந்துகொண்டு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு கூட பணம் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த இவ்வாறான கடுமையான தீர்மானங்கள் சரியே என மக்கள் இந்த வருட இறுதியில் புரிந்துகொள்வார்கள் என்றும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ரணிலை விட சிறந்த தலைவர் கிடைக்காது – ருவன் விஜேவர்த்தன

இலங்கை எனும் கப்பலை இலக்கிற்கு வழிநடத்த ஒரு சிறந்த கேப்டன் ஒருவரும் கிடைக்க பெற்றுள்ளது

இலங்கை எனும் கப்பலை புதுப்பித்து, உயிரூட்டி இருப்பதுடன் கப்பலை அதன் பயண இலக்குக்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்க பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

புதுவருட பிறப்பை முன்னிட்டு கம்பஹா பிரதேசத்தில் மத வழிபாடுகளில் ஈடுட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை எனும் கப்பலை புதுப்பித்து, உயிரூட்டி இருப்பதுடன் கப்பலை அதன் பயண இலக்குக்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்கப்பெற்றுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்று முன்னெடுத்துச்செல்ல அனைவரும் பின்வாங்கிய நிலையில், மூழ்கிக்கொண்டிருந்த கப்பலை மீட்டது, ஜனாதிபதி பதவியின் கடினமான பொறுப்பை தயக்கமின்றி தோல்மீது சுமந்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவாகும்.

அத்துடன் ஆயிரக்கணக்கான சவால்களை எதிர்கொண்ட ஜனாதிபதி, செயற்படுத்திய வேலைத்திட்டங்கள் காரணமாகவே கப்பல் மீண்டும் புதிப்பித்து உயிரூட்டப்பட்டிருக்கின்றது.

அதனால் கடந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட பாரிய அனுபவங்களுடனே புது வருடத்துக்கு கால் எடுத்து வைக்கின்றோம். எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றார்

என்னை விமர்சித்தவர்கள் ஐ.தே.க வுடன் இணைந்து அனைத்தையும் இழந்துள்ளனர் – மைத்திரிபால

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த போது என் மீது கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அவ்வாறு என்னை விமர்சித்தவர்களே இன்று ஐ.தே.க. தலைவருடன் இணைந்து அனைத்தையும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (டிச. 26) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரம் தொடர்பில் அரசாங்கமும் அறிந்திருக்கிறது. எனவே விரைவில் மக்களுக்கான ஏதேனுமொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னர் 1977 வரை நாடு இவ்வாறானதொரு நிலைமைக்கு தள்ளப்படும் என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை.

இதில் தாக்கம் செலுத்தும் 3 பிரதான காரணிகளில் முதலாவது 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும். பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயற்படுவதற்கு இதுவே வழியமைத்தது.

தற்போது அமைச்சரவை நியமனமும் இதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே விஞ்ஞானபூர்வமாக அமைச்சரவை நியமிக்கப்பட்டால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழல் மாற்றமடைய வேண்டுமெனில் தற்போதுள்ள முறைமையில் மாற்றம் அவசியமாகும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவையாகும். எனினும் இறுதியில் அவர்களின் நற்பெயரை சீரழித்துக் கொண்டனர்.

தலைவரொருவர் இன்றி 3 நாட்கள் நாடு காணப்பட்டது. அந்த 3 நாட்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை தலைவராக தெரிவு செய்திருக்க வேண்டும். எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே அதனை தவறாக வழிநடத்திவிட்டனர்.

நான் ஜனாதிபதியானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது, கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டதாக தற்போது பொதுஜன பெரமுனவிலுள்ளோர் என்னை விமர்சித்தனர்

. எவ்வாறிருப்பினும் நான் அன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் பொதுஜன பெரமுன ஜனாதிபதி , பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளையும் இழந்து நிற்கிறது.

அன்று பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு கட்சி ஸ்தாபிக்கப்பட்டு, இத்தகைய வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அதன் தலைவர் பெருமை பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் எதுவும் இல்லாமல் போயுள்ளது என்றார்.