இலங்கையின் துறைமுகங்கள் விமானப் போக்குவரத்து துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா விருப்பம்

இலங்கையின்துறைமுகங்கள் விமானநிலையங்களை பாதுகாப்பதுகுறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டுவிட்டரில் இலங்கைக்கானஅமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவை தான் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் துறைமுகங்கள் விமானநிலையங்களின் அபிவிருத்தி குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ள அவர் இவை இலங்கையின் வர்த்தக மற்றும் தனியார் துறையினரை முன்னிறுத்திய அபிவிருத்திகளிற்கு அவசியமானவை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விமானப்போக்குவரத்து துறை துறைமுகங்கள் போன்றவற்றின் வெளிப்படையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குமான அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.