இலங்கையைப் போன்று சீனா ஏனைய நாடுகளுக்கும் உதவ வேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு உதவியதை போன்று ஜாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுக்கும் சீனா உதவ வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த மாதம் சீனாவுக்குச் சென்றிருந்த கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சீனாவின் உயர்மட்ட பொருளாதார அதிகாரி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசிய அவர், கடன் நிவாரண விடயத்தில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி20 நாடுகளின் பொதுவான கட்டமைப்பின் கீழ் உதவி கேட்ட பொருளாதார சரிவை சந்தித்த நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் சீனா ஏற்படுத்திய தாமதம் அமெரிக்கா உள்ளிட்ட பிற மேற்கத்திய நாடுகளினால் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஜி20 கட்டமைப்பின் கீழ் உதவிக்கு தகுதியில்லாத நடுத்தர வருமான நாடான சாட் மற்றும் இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் துண்டாடுதல் ஆகியவை நிதி ஸ்திரத்தன்மை அபாயங்களை அதிகரிக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.