இலங்கை மாணவர்களுக்கு சீனா அரிசி நன்கொடை

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி பொதிகள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) 1,000 மெற்றிக் தொன் பொதிகள் கொண்ட அரிசி தொகை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

மேலும் குறித்த அரிசி பொதிகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவு சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 7,000 மெட்ரிக் தொன் அரிசி பொதிகள் சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.