கனேடிய பூர்வகுடிகளின் இனப்படுகொலையை இலங்கையில் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் – விமல் வீரவன்ச

கனடாவில் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை, இலங்கையிலும் அனுட்டிக்க வேண்டுமென இலங்கை மேலவை சபை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா பிரதமர் கூறியுள்ளார்.

இதனை இந்த சபை கண்டிக்க வேண்டும். கனடாவில் மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அண்மையில் பெரிய புதைகுழியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் கொன்று குவிக்கப்பட்டதை ஜூன் 21 ஆம் திகதி அனுட்டிக்கிறார்கள். இலங்கையில் நடக்காத இனப்படுகொலையை அவர்கள் அனுட்டிக்க முடியுமென்றால், கனடாவில் நடந்த இனப்படுகெ்கொலையை நாம் ஏன் அனுட்டிக்க முடியாது?

அதனால் ஜூன் 21ஆம் திகதி கனடா இனப்படுகொலையை நாம் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்ற வேண்டுமென்றார்.