சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுவிப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக திறந்த நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து அவரது வழக்கு நடவடிக்கைளை முடிவுக்கு கொண்டு வர இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 5ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.