தேர்தலை நடத்தக் கோரி சபைக்குள் ஆர்ப்பாட்டம்; ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்

சபாநாயகரை மறைத்துக்கொண்டு அக்கிராசனத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் யாவும் நாளை (22) காலை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கள்ள அரசாங்கமே ! தேர்தலை நடத்து என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.