சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட யோகா நிகழ்வு இன்று சனிக்கிழமை (17) கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அமைச்சர்களான பந்துல குணவர்தன, சுசில் பிரேம ஜயந்த, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.