தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் ஜனவரி ஆரம்பத்தில் சந்திப்பு – மாவை சேனாதிராஜா

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஜனவரி இரண்டாம் வாரம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக தமிழ்த்தேசியக் கட்சிகள் எத்தகைய விடையத்தை கலந்துரையாடவுள்ளோம் என்பதை கொழும்பில் ஆராயவுள்ளோம் என இலங்கை தமிழரச்சுக் கட்சி தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

ஐனாதிபதி மற்றும் தமிழ்தேசிய கட்சிகளுடனான சந்திப்பு  தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் பிளவு பட்டு தனித் தனியா கட்சிகள் போட்டியிடுவதன் மூலம் எங்களின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்காக அரசாங்கத்துடன் போச்சு வார்த்தை ஆரம்பித்திருக்கின்ற நேரத்தில் தேர்தல் எவ்வாறு எத்தகைய முறையில் நடைபெறப்போகின்றது என்பது தெரியாத நிலையில் நாங்கள் விவாதத்திற்கு அனுமதிப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியில் பிளவை, குழப்பத்தை ,பலவீனத்தை ஏற்படுத்திவிடும்.

மேலும், ஜனாதிபதியுடன் ஜனவரி மாதம் 10 ,11, 12 ஆம் திகதிகளில் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவது தொடர்பில் திகதிகள் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தமிழ்த்தேசியம் தொடர்பில் செயற்பட்டுவருகின்ற கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடிவருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக ஜனவரி 7, 8 ஆம் திகதிகளில் கொழும்பி கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயவுள்ளோம் என்றார்.