தமிழ்ப் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாதவர்களால் நாடு ஒருபோதும் சுபீட்சமடையாது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

அரசியலமைப்புச் சபையிலேயே தமிழ் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாத தரப்பினரால், நாடு ஒருபோதும் சுபீட்சத்தை காணாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.