தென்னக்கோனின் நியமனத்தை அரசியலமைப்பு சபை ஏற்கவில்லை – சஜித் பிரேமதாச

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை (CC) அனுமதி வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ஆதரவாக நான்கு வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் இருந்தன மேலும் இருவர் வாக்களிக்கவில்லை. தீர்மானத்தை மேற்கொள்ள குறைந்தது 5 வாக்குகளாவது தேவை. வாக்குகள் சமனாக இருந்தால் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்கலாம். வாக்குகள் சமனாகவும் இல்லை.

எனவே அரசியலமைப்பு இரண்டாவது முறையாக அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.