தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் பதவி விலகல் கடிதம் ஏற்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.