நாளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாளை நாடு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாளை 08.02.2023 காலை 8 மணி தொடக்கம் 09.02.2023 காலை 8:00 மணி வரை இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதன் போது அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவை இடம்பெறாது.

மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் மேலும் 40 வரையிலான தொழிற்சங்கங்கள் இணைந்து இப்பணிப்பு புறக்கணிப்பினை மேற்கொள்கின்றன.