நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் இலங்கை மீள சிந்திக்க வேண்டும் – சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து இலங்கை மீளசிந்திக்கவேண்டும் என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.’

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் கருத்து சுதந்திரத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் காரணமாக அரசாங்கம் இந்த சட்டமூலம் குறித்து மீள சிந்திக்கவேண்டும் என சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஓக்டோபர் இரண்டாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் இணையவெளியில் கருத்துசுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரத்தை பாதிக்ககின்றது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன பிழையான அறிக்கைகளை வரைவிலக்கணப்படுத்தி ஒழுங்குபடுத்தி சட்டநடவடிக்கையை எடுப்பதற்கான அதிகாரம் புதிய ஆணைக்குழுவொன்றிற்கு வழங்கப்படவுள்ளது என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் இலங்கை சுதந்திர ஊடகஇயக்கம் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உட்பட பல அமைப்புகள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டமூலத்தை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் உடனடியாக இது குறித்து முழுமையான மறுஆய்வினை மேற்கொள்ளவேண்டும் எனவும்வேண்டுகோள் விடுத்துள்ளன.