ரெலோ இயக்கத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் தன்வந்த்!

பாக்கு நீரினையை கடந்த இளம் உலக சாதனையாளர் ஹரிகரன் தன்வந்த் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரால் நிறைகுடம் வைத்து அமோக வரவேற்பளிக்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் 13 வயதில் அவரது துணிச்சலான சாதனையை பாராட்டி ஊக்குவிக்குமுகமாக துவிச்சக்கர வண்டி ஒன்றும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கபட்டார்.

இந்நிகழ்வுகள் இன்றைய தினம் மாலை ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் இயக்கத்தின் பொதுக்குழு, மூத்த உறுப்பினரும் முன்னால் நகரசபை உறுப்பினருமான சிங்கன், மற்றும் பல மூத்த உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது இந்நிகழ்வுகளை மூத்த உறுப்பினர் சிங்கன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.