வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது

கல்வி அமைச்சிற்குள் நுழைந்த ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டளர்கள் இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததுடன், சற்று நேரத்தில் கல்வி அமைச்சிற்குள் நுழைந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னரே பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் கல்வி அமைச்சிற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டக்காரர்களை வௌியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட பிக்கு மாணவர் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 பிக்கு மாணவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.