வறுமையை ஒழிக்க நியூசிலாந்திடம் ஆதரவு கோரிய எதிர்கட்சித் தலைவர்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06) இடம் பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் வறுமையை ஒழிக்க நியூசிலாந்து அரசாங்கத்தின் ஆதரவை கோரிய எதிர்கட்சித் தலைவர், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டு அரசியலில் தனித்துவ அடையாளத்தை பதித்து எதிர்க்கட்சியின் அரசியல் கட்சி என்ற வகையில் பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டங்கள் மூலம் நாட்டுக்கு பெறுமதி சேர்த்ததை எதிர்க்கட்சித் தலைவரால் நினைவு கூரப்பட்டதோடு, நியூசிலாந்து உயர்ஸ்தானிகரின் பாராட்டும் கிடைக்கப் பெற்றது.