வைத்தியர்கள் வெளிநாடு செல்வதால் உள்ளூர் வைத்திய சாலை முறைமை செயலிழக்கும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களுக்கு முறையான சுற்றறிக்கைகள், திட்டமிடல், ஒழுங்குமுறை மற்றும் முறையான வழிமுறைகளின்படி பணியாற்ற வாய்ப்பு வழங்கினால், நாட்டில் சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் எந்த தடையும் இருக்காது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூகக் காரணிகளால் இந்நாட்டு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

மேலும், நெருக்கடிகளுக்கு பதிலாக அரசாங்கம் தலையிட்டு சாதகமான தீர்வுகளை வழங்கினால், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.

வைத்தியர்களுக்கான 5 வருட சேவை சுற்றறிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு வழிகாட்ட வேண்டும்.

தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஓய்வுபெறும் 60 வயதை பூர்த்தி செய்த சிரேஷ்ட வைத்தியர்களும் இளம் பயிலுநர் வைத்தியர்களும் தமது விருப்பத்துக்கேற்ப வேறு நாடுகளுக்கு பணிக்குச் செல்வதால் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், உள்ளூர் வைத்தியசாலை முறைமையை செயலிழக்கச் செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.