அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கத்துக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – சஜித்

அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கத்துக்கு ஒருபோதும் நாம் அஞ்சப்போவதில்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரச அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச அடக்குமுறைக்கான இந்த எதிர்ப்பு பேரணியானது கொழும்பு கோட்டை ரயில் நிலைய பகுதிவரை செல்வதற்கு இருந்தது. எனினும் சட்டத்துக்கு மதிப்பளித்து கொழும்பு வர்த்தக மையப்பகுதியிலேயே எமது இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்கின்றோம்.

ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதறகான இந்த பயணத்தில், தேர்தலை நடத்த செய்வதற்கான பயணத்தில், அரசாங்கத்தை மாற்றும் பயணத்தில் முதலாவது சிறிய நடவடிக்கையாக இன்றைய இந்த பேரணி அமைந்துள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டாம், பேரணிக்காக வீதியில் நடந்து திரிய வேண்டாம் என்று எமக்கு கடிதம் அனுப்பினர்.இளைஞர் சமூகத்தின் விடுதலைக்காக நாம் தொடர்ச்சியாக போராடுவோம்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி எமது ஜனநாயக உரிமையை, வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் ஆகியோரின் உரிமைகளை இன்று பறித்துள்ளனர்.தற்போது மிலேச்சத்தனமான அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. திரிசங்கு நிலையில் உள்ள அரசாங்கமாகும்.

அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியல் இருக்கின்றது. எனினும் இவற்றுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.

நாம் எந்த நேரத்திலும் எதற்கும் முகங்கொடுக்க தயாராகவுள்ளோம். எனவே எமது அஹிம்சை ரீதியான, ஜனநாயக ரீதியிலான இந்த போட்டம் வெற்றிபெறும்.

இன்று இந்த பேரணியை நாம் மிகவும் அமைதியான முறையிலேயே முன்னெடுக்கின்றோம்.நாட்டின் பாதுகாப்பு துறையுடன் மோதுவதற்கு நாம் தயாரில்லை.எனினும் மக்கள் பிரநிதித்துக்கான கடமைகளை ஆற்றாது நாட்டை சீரிழிக்கும் வரிச்சுமையை திணிக்கும் மக்களின் வறுமை நிலையை அதிகரிக்கும் அரசாங்ததுடனயே எமது போராட்டம் உள்ளது.