இலங்கைக்கான சீனத் தூதுவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்துள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான கடன் பிரச்சினை, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், நேரடி முதலீடு, வரலாற்று உறவு, புதிய ஆற்றல், சுற்றுலாத் துறை மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.