இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்ரேலியாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கிம் வாட்ஸுடன் கலந்துரையாடியுள்ளார்.

23 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 22ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரு அமைச்சர்களும் பங்காளதேஷிற்கு சென்றுள்ளனர். இதன்போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார அபிவிருத்தி, கடல்சார் மற்றும் சுற்றுலா துறைகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இருதரப்பு நலன்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.