ஐநா விசேட பிரதிநிதி ஜனாதிபதி ரணிலுக்கு விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு!

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கார தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஐநாவின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட பிரதிநிதி மேரி லோலர் கவலை வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மேரி லோலர் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அதில்,  ”மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தான் மிகுந்த கவலையடைகின்றேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர்களின் தடுப்புக் காவல் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்வதாகவும் மேரி லோலர் தெரிவித்துள்ளார்.  அவ்வாறு தடுப்பு உத்தரவுகளில் கையெழுத்திட்டால் அது இலங்கைக்கு கறுப்புத் தினமான அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.