குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாதவர்கள் பல்கலைக்கழங்களில் இருந்து நீக்கம் – புதிய சட்ட மூலம்

குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாத மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சில மாணவர்கள் 9 முதல் 10 வருடங்கள் வரை பரீட்சைக்குத் தோற்றாமல் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி, அரசியல் பணியை மேற்கொள்வதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைக்குத் தோற்றாமல் நீண்டகாலமாக பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கணக்கெடுப்பை குறித்த காலத்துக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பல்கலைக்கழக வேந்தர்களின் ஒத்தாசையை பெறவுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.