இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு அழுத்தமளியுங்கள் : புதிய இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி மூடிய அறைக்குள் வலியுறுத்தினார். அவ்வாறு வலியுறுத்த மட்டுமே இந்தியாவால் முடியும்” என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இன்று தெரிவித்தார்

தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பிரதி நிதிகளுக்கும் இந்திய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இன்று மாலை சுமாா் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்த இந்தச் சந்திப்பு நீடித்தது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும், அதிகாரம் பகிரப்பட்டு மாகாண சபைகளுக்கான தேர்தலால் நடத்தப்பட வேண்டும், தேர்தல் நடத்தப்பட விட்டால் திரும்பத் திரும்ப நாம் உங்களிடம் இப்படி முறையிட்டுக் கொண்டிருப்பதை விட வேறு வழி இல்லை என தமிழ் தரப்பினா் இந்திய தூதுவரிடம் தெரிவித்தனர்

முல்லைத்தீவில் மகாவலி திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் நிலத்தில் 600 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது, திருஆகாணமலையில் மிக சிறிய திட்டத்தை முன்னெடுப்பதற்காக கூறி இந்தியாவை தவிர்த்து பல நாடுகளை உள்ளீா்க்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தலை விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தமிழ் தரப்புகள் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டின.

அபிவிருத்தி திட்டங்களுடன் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்த இந்திய துாதுவா், இந்தியாவிலிருந்து கடல் அடி மார்க்கத்தில் மின்சாரம் கொண்டு வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைப்பு, தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரங்களில் இந்தியா என்னும் அதிக வகைபாகத்தை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளின் உறுப்பினர் வலியுறுத்தினாா்கள்.

இதற்கு பதிலளித்த இந்திய தூதர், இந்தியாவும் சர்வதேசமும் இலங்கையிடம் இவற்றை சொல்லத்தான் முடியும். இந்தியா தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி இந்த விடயங்களை வலியுறுத்தினார். பின்னர் பகிரங்கமாகவும் சொன்னார் இந்தியா தொடர்ந்து அதனை வலியுறுத்ததும் என்றும் இந்தியத் துாதுவா் தெரிவித்தார்.