Velikkadai Sirai Padukolai

தேசிய வீரர்கள் தினம் வடக்கு கிழக்கில் பல இடங்களில் போஸ்டர்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் ஏற்பாட்டில் வெலிக்கடை சிறைப்படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பதாகைகள் வடக்கு கிழக்கில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளிகளான ஜெகன், தேவன்,நடேசுதாசன், குமார்,சிவபாதம்,சிறிக்குமார்,மரியாம்பிள்ளை,குமாரகுலசிங்கம் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த போஸ்டல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தமது தலைவர்கள் வெலிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தினமான யூலை 25 இருந்து 27 திகதி வரை தமிழ் தேசிய வீரர்கள் தினம் ஆக பிரகடனப்படுத்தி நினைவுகூரப்பட்டு வருகிறது.