நாட்டில் ஊழல் மோசடி தீவிரமடைந்துள்ளது – தம்மரத்ன தேரர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பொதுத்தேர்தலை நடத்தினால் ஆரம்ப கட்டமைப்பில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஏனெனில் அரசியல்வாதிகள் அனுமதி பத்திரம் பெற்ற ஊழல்வாதிகள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

மிகிந்தலை ரஜமஹா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியளலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது,தேர்தலை நடத்திய உடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா,சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குமாறு.தேர்தலை நடத்தினால் ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள்.

பிரதேச சபை, மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என அனைத்து அரச கட்டமைப்பு ஊழல் மோடியால் துறைபோயுள்ளது.

அரசியல்வாதிகள் அனுமதி பத்திரம் பெற்ற ஊழல்வாதிகளாக உள்ளார்கள். எவர் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் வாழ்வதற்கான போராட்டத்தை தொடர வேண்டிய நிலை தற்போது காணப்படுகிறது.

பொதுத்தேர்தலை நடத்தினால் ஆரம்ப கட்டமைப்பில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் நிதியை மோசடி செய்ய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அடி மட்டத்தில் இருந்து ஊழல் மோசடி தீவிரமடைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை உள்ளுராட்சி மன்ற சபைகள் தோற்கடிக்கின்றன.உள்ளூராட்சி மன்றங்கள் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகின்றன.உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஊழல் மோசடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்.அரச நிதி கொள்ளையடிக்கப்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.மோசடி செய்யப்பட்ட நிதியை அரசுடமையாக்க வேண்டும் என்றார்.