மட்டக்களப்பு சென்ற பஸ் ஆற்றில் விழுந்து விபத்து 11 பேர் உயிரிழந்தனர்

70 பயணிகளுடன் மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கி வந்த பேருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 40பேர் மருத்துவமனைகளில் சேர்க் கப்பட்டுள்ளனர்.

நேநற்றிரவு 8 மணிக்கு சற்று முன்னதாக பொலநறுவை மன்னம்பிட்டி பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிய வருகின்றது.

பொலநறுவை – கதுரவெல நகரத்தில் இருந்து மட்டக்களப்பின் காத்தான்குடி நகரத்துக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது. சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 70 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மீட்கப்பட்டனர்.

பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண் டிருந்தனர். நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன. காணாமல் போன பலர் மீட்கப்பட்டதுடன், ஆற்றில் பாய்ந்த பேருந்தும் மீட்கப்பட்டது. இந்த விபத்துக் குறித்து மன்னம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்