கிழக்கு எம்.பிக்களையும் அழைக்காவிட்டால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வதில்லை: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் கு.சுநே்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், பா.கஜதீபன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் செயலாளர் துளசி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆர்.இராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் யாப்பு மற்றும் மாவட்ட மட்ட செயற்பாடு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதி கலந்துரையாடல்களில் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும், அவ்வாறு அழைக்கப்படாவிட்டால் பேச்சுக்களில் கலந்து கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்தனர்