தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் நசுக்கப்பட வேண்டும் என சம்பந்தன் விரும்பினார் – ஸ்ரீகாந்தா

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் நசுக்கபட வேண்டும் என்பதனை சம்பந்தன் முழு மனதாக விரும்பினார் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் சாவச்சேரியில் இடம் பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னதாக சம்பந்தனுக்கு பதிலாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவிலே, சுயமரியாதையும், துடிப்புமுடைய தமிழன் போர்க்களத்தில் குழந்தைகள், பெண்கள் தொடக்கம் முதியவர்கள் வரை விமான குண்டு வீச்சிற்கும் , ஷெல் அடிகளிற்கும் பலியாகி கொண்டிருந்த பொழுது தலைவராக இருந்திருந்தார்.

நான் திட்டவட்டமாக கூறுகின்றேன் யுத்தம் கட்டாயம் நிறுத்தபட்டிருக்கும்.எமது 22 எம்பிக்களும் அப்போது பல்வேறு நாடுகளில் செயலாற்றி வரும் நிலையில் ராமதாஸ் எங்களை டெல்லிக்கு அழைத்து இந்திய பாராளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைத்தார்.

இந்திய நாடாளுமன்றிலுள்ள கட்சித் தலைவர்களிடம் இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பாராளுமன்றிலுள்ள அத்தனை கட்சி தலைவர்களுக்கும் பகிரங்க வேண்டுகோளாக தனித்தனியாக சந்திக்கும் ஆவலோடு ஒரு கடிதத்தைபாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் இராமதாஸ் எமக்கு அனுப்பி அந்த கடிதத்தை கையொப்பமிட்டு அதனை மீண்டும் தனக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதனை கையொப்பமிட்டு மீண்டும் அனுப்புமாறும் அதனை தான் ஆவணபடுத்துமாறும் கூறிய போதும் குறித்த கடிதம் கிடைத்தது என்றுகூட பாட்டாளி மக்கள் தலைவருக்கு சம்பந்தன் அறிவிக்கவில்லை.

ஏனெனில் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட்ட வேண்டும் என்பதனை சம்பந்தன் உள்ளூர விரும்பினார். அவரது இறுதி நாட்களில் இதனை கூற வேண்டியது எமது கடமை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும், உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும் – கதிர்

ஈழத்தமிழர்களுக்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படுகின்ற போதுதான் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டாத அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும். அதுதான் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயகப் பேராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் புதுடில்லியில் இடம்பெற்ற தமிழர்களுக்கான சமூக நல அறக்கட்டளையின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு அடிப்படைத் தீர்வுமின்றி நிரந்தரத் தீர்வுமின்றி அவல நிலைக்குள் வாழந்து கொண்டிருக்கும் எமது ஈழத்தமிழினம் 70 ஆண்டு காலமாக தங்களது உரிமைக்காக ஆயுத ரீதியாகவும், அகிம்சை ரிதியாகவும் போராடுகின்ற இனமாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றது.

எமது மக்களுடைய உரிமை சார்ந்த போராட்டங்கள் ஆயுத ரீதியாக முன்னெடுக்கப்பட்ட போது எமது மக்கள் தாயகத்தில் பலம் மிக்க ஒரு சக்தியக இருந்தாhகள். இலங்கைத் தீவைப் பொருத்தவரையில் 65 சதவீதம் கடற்பரப்பையும் கடல் சார்ந்த நிலத்தையும் கொண்ட எமது தாயகம் எமது கட்டுப்பாட்டில் நிழல் அரசாங்கம் போன்று இருந்தது.

அந்தக் காலத்தில் தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கியமான பகுதியாகிய எமது தாயகப் பகுதி தமிழர்கள் வசம் பாதுகாப்பு அரணாக இருந்தது. அது தமிழ் மக்களுக்கு மட்டுமலல்லாது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒரு இரும்புச் சுவராகவே இருந்தது.

ஆயுதப் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னர் நாங்கள் எமது பலத்தை எமது தாயக மண்ணில் இழந்து நிற்கின்றோம். உண்மையாக இலங்கை அரசாங்கம் காலம் காலமாக இந்திய அரசாங்கத்தை மிக இலகுவாக ஏமாற்றி வருகின்றது. இதனை இந்தியா நன்கு உணர வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்து விட்டால் இந்தியாவின் மாநிலங்கள் மேலும் பிரிக்கப்பட்டு விடும் என்ற ஒரு பொய்யான செய்தியை இலங்iகையின் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பாடமாகப் புகட்டி வருகின்றார்கள். இந்த அடிப்படையிலே தான் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயத்தில் இந்தியா நீண்டகாலம் மௌனம் காத்தது.

தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் இந்தியாவிற்கு பாதமகமாக அமையாது என்ற விடயம் ஈழப் போராட்டம் திட்டமிட்டு நசுக்கப்பட்டதன் பின்னர் வெளிப்படையாகி இலங்;கையின் உண்மையான முகத்திரை கிழிக்கப்பட்டது. இன்று தமிழர்களின் வல்லாதிக்கப் பூமி வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் மிக மிகப் பாதகமான விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழர்களையும் இந்தியாவையும் பிரிக்கின்ற போது இலங்கை அரசாங்கம் தன்னுடைய தந்திரோபாயமான நகர்வுகளை தெற்;காசியப் பரப்பிலே நிறைவேற்றக் கூடிய சாத்தியமான பக்கங்கள் உருவாக்கப்பட்டது. அதில் இலங்கை அரசாங்கம் வெற்றி கண்டது.

இந்திய அரசாங்கம் தோல்வி கண்டது. அந்தத் தோல்வியின் அடிப்படையில் தான் இன்று தமிழர்களின் தாயகப் பகுதியான வட கிழக்கில் எமக்கு வேண்டாத அந்நிய சக்தி நாடுகளை களமிறக்கி இந்தியாவின் பூகோள ரீதியான பாதுகாப்பிற்கு அச்சறுத்தலான விடயங்களை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருகின்றது.

வடக்கு கிழக்கு தாயகப் பகுதியில் அந்நிய சக்திகள் அங்கே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நிச்சயமாக இந்தியாவின் தமிழ்நாடு மட்டுமல்லாத ஏனைய மாநிலங்களுக்குள்ளும் இந்த நாடுகள் உடுருவிச் சென்று எதிர்வரும் காலங்களில் இந்திய அரசாங்கத்தின் மாநிலங்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்தின் வெற்றியாக அமையும்.

எனவே ஈழத்தமிழர்களுக்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படுகின்ற போதுதான் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டாத அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும். அந்த அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்தில் இருந்து என்று வெளியேற்றப்படுகின்றதோ அதுதான் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும்.

இன்று சந்தர்ப்;பவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் எமது இனம் சிக்குண்டு தவிக்கின்றது. 2009ம் ஆண்டு எமது ஆயதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எங்களது தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாக நாங்கள் உருவெடுத்திருக்கின்றோம்.

இறுதிக் கட்டத்தில் எங்களது விடுதலைப் போராட்டம் இனி அரசியற் போராட்டமாக மாற்றப்படும் விடயத்தைத் தலைவர் கூறியிருந்தார். அந்த சிந்தனைக்கு அமைவாக ஜனநாயகப் போராளிகள் ஆகிய நாம் இந்த விடயங்களை இந்திய அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். ஈழத்தமிழர்களும் இந்திய தேசமும் எதிர்காலத்தில் நட்புறவுச் சமூகமாக இணைந்து தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கருதி நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி செயற்படுவதாக FIDH குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி செயற்படுவதாக மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனம் (International Federation for Human Rights) குற்றம் சுமத்தியுள்ளது.

போராட்டத்தை ஒடுக்குவதன் மூலம் நாட்டில் தந்திரோபாய ரீதியாக அடக்குமுறை கையாளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனத்தில் 116 நாடுகளை சேர்ந்த 188 அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் போராட்டங்களை தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி சமீபத்தில் தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானது என மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆதிலுர் ரஹ்மான் கானின்  (Adilur Rahman Khan)கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போராட்டக்காரர்களின் உரிமைகளை தற்போதைய அரசாங்கம் எந்தளவிற்கு பாதுகாக்கிறது என்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி ,  நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் 08 பேர் தாக்கப்பட்டமை குறித்தும் அந்த அறிக்கையில் கடுமையாக சாடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான முதல் நான்கு ஊடகவியலாளர்கள் நியூஸ்ஃபெஸ்ட் இலச்சினை பொறிக்கப்பட்ட T-Shirts
அணிந்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக அடையாள அட்டையுடன் கடமையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள்  தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நான்கு ஊடகவியலாளர்களை காப்பாற்றுவதற்காக சென்ற மேலும் நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையும் பாரதூரமான நிலைமை என சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான போராட்டங்களை ஒடுக்குவதற்காக துப்பாக்கி குண்டுகள்,  கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை பிரயோகத்தினை பயன்படுத்துவது, பொதுமக்களின் ஒன்றுகூடலை அநாவசியமாக கட்டுப்படுத்துவது, அவசரகால சட்டத்தை பயன்படுத்தி சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது , சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவை பாரதூரமான விடயம் எனவும் சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பிலான இடைக்கால மீளாய்வு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிக்கை வௌயிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிகவிரைவில் இலங்கைக்கு கிடைக்கும் – அமெரிக்கா உறுதி

அனைத்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிகவிரைவில் இலங்கைக்கு கிடைக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஏனைய நாடுகளின் நம்பகத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் கடினமான சீர்திருத்தங்கள் தொடர்பில் கருத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  ஒரு நாடாக செயற்படுவது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சர்வதேச கடன் வழங்குவோரின் நம்பிக்கையான தீர்மானங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,

இலங்கை மிக விரைவில் ஸ்திரமான பொருளாதாரத்தை அடையும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் குறிப்பிட்டிருந்ததாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மகிழ்ச்சி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் ஊடாக அதன்கீழ் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை முடிவிற்குக்கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூறவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த நிலையில், நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி நீண்டகாலமாக சிறுபான்மையின மக்களையும் விமர்சனங்களை முன்வைப்பவர்களையும் அமைதிப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப் பட்டுவந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மன்னிப்புச்சபை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் மூலம் இந்த மனித உரிமை மீறலை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வருமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கை அதிகாரிகள் மீது கனடாவின் பொருளாதாரத் தடைகளை பாராட்டியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நியூரம்பெர்க் போன்ற புதிய நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரவும் அழைப்பு விடுப்பதாக உலகத் தமிழ் அமைப்புகளின் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வேல் வேலாயுதபிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு உயர்மட்ட அதிகாரிகள் மீது கனடா இந்த மாத தொடக்கத்தில் தடைகளை அறிவித்திருந்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கையை கனடா நிறுத்த வேண்டும் என சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியிடம் தமது தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்ததாக வேலாயுதபிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையின் மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்கா முன்னர் அனுமதி அளித்துள்ளது, ஆனால் ராஜபக்ஷ சகோதரர்களை தடை பட்டியலிட்ட ஒரே நாடு கனடா என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனாவால் பூர்த்தி

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி வந்துள்ளது என கூறியுள்ளார்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் கல்வியின் தரமும் மேம்பட வேண்டும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கான நடைமுறை திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை புகுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதல் ஒரு துயரச் சம்பவம் எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் திணிக்கப்பட்ட 13ஐ முழுமையாக அமுல்படுத்தாதீர்கள்; ஜனாதிபதி, பிரதமர், எம்.பிக்களுக்கு பெளத்த தேரர்கள் கடிதம்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் அது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவால் திணிக்கப்பட்ட 13வது திருத்தம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே 13 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் எனவும் உள்நாட்டு வளங்கள் மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் நாட்டுக்கு இழந்த செல்வம் மற்றும் வளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது, அரச செலவீனங்களைக் குறைப்பது அவசியம் என்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்த எந்தவொரு மூலோபாயத் திட்டங்களை முன்வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

மரண அச்சுறுத்தல் விவகாரம் : ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் – அனுர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச்சுறுத்தல் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பது குறித்தும் ஆராய வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.