இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமைக்கு ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை டோக்கியோ நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வௌிநாடு அல்லது வேறு ஒரு தரப்பினரது தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய செயற்றிட்டங்களை இரண்டு தரப்பினரதும் இணக்கப்பாடுகள் இல்லாமல் நிறுத்துவதற்கு அல்லது இரத்து செய்வதற்கு முடியாதவாறு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக சட்டங்களை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அனைத்து பாரிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான யோசனைகள், அந்த செயற்றிட்டங்களின் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியதை கட்டாயமாக்குவதாகவும் ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக ஜப்பான் பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

இதனிடையே, ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான அமைச்சர் Taro Kono-வை ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை நகர்த்துவதற்கான திட்டம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையினரையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையின் 20 ஆவது ஆண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஆரம்பிப்பதற்காக தொழில் முயற்சியாளர்களின் பூகோள இயக்கமொன்றை உருவாக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆசியா எதிர்கொள்ளும் மூன்று சவால்கள் – ஜப்பான் உரையில் ஜனாதிபதி ரணில்

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் சவால்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்ற ஆசியாவின்  எதிர்காலம் என்ற நிக்கேய் போராத்தின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ஆசியா எதிர்கொள்ளும் இந்த மூன்று சவால்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறுபட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் மனித உரிமைகளின் வரையறைகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற வகையில் ஆசியாவின் முக்கியத்துவம் உலக சனத்தொகையில் 60வீதமான மக்கள் வாழ்வது  உலக பொருளாதாரத்திற்கு ஆசியாவின் மிகப்பெரிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் மீட்சி இந்தியாவின் உள்நாட்டு கேள்வி போன்றவற்றையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல் மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும், அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் குறித்து ‘நிக்கேய்’ மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது ஆசிய நாடுகளின் வெப்பநிலை உயர்வு, கடுமையான  வானிலை நிலைமைகள் மற்றும் கடல் மட்ட உயர்வு , ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் என வலியுறுத்தினார்.

இலகு ரயில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – ஜப்பான் தூதுவர்

கொழும்பு – மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.

இலங்கை மோட்டார் வர்த்தக சங்கத்தினால் நேற்று புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலகு ரயில் புகையிரத திட்டம் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது மற்றும் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை இலங்கையால் மீண்டும் பெற முடியுமா என்பதை பொறுத்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தினால் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் கொழும்பு, கோட்டையிலிருந்து மாலம்பே வரையான இலகு ரயில் சேவைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தது.

ஜைக்கா நிறுவனத்தினால் 12 ஆண்டுகள் சலுகை காலம் உள்ளடங்கலாக, 40 ஆண்டுகளுக்கு 0.1 சதவீத வட்டியுடன் கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித காரணமும் இன்றி, இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 2020 செப்டெம்பர் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கமையவே இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணங்கியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், ஜப்பான் தூதுவர் அதற்கு மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்காக ஜப்பான் 1.8 மில்லியன் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக யுனிசெப் நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானிய திட்டங்களின் மூலம் இலங்கைக்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தயாராக இருக்க, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரம் போதுமானதாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையைப் பெறுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் காரணமாக இலங்கைக்கு கூடுதலாக 220 பில்லியன் யென் (1.6 பில்லியன் அமெரிக்க டொலர்) நிதி திறக்கப்படும் என்று Bloomberg இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் இந்த 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு திறக்கப்படும் என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கு வழங்கிய அங்கீகாரம் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது என ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜப்பான் இலங்கைக்கு மேலும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (WFP)மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்கயே இவ்வாறு ஜப்பான் வழங்குகின்றது.

இந்த நிதியுதவியின் மூலம் WFP குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுப் பொதிகளை வழங்கி, அவர்களின் மாதாந்த உணவுத் தேவைகளில் பாதியை இரண்டு மாதங்களுக்குப் பூர்த்தி செய்யும்.

மேலும் இந்த நன்கொடையானது நான்கு மாத காலத்திற்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கொள்வனவு மூலம் திரிபோஷா போன்ற வலுவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும், இது ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகளவு பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

“இந்த முக்கிய தருணத்தில் இலங்கைக்கு மேலதிக மனிதநேய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அறிவிப்பதில் நாம் மகிழ்வு கொள்கின்றோம். கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து ஜப்பான் அரசாங்கத்தால் WFP மூலம் உணவு உதவியானது மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் முடிந்த அளவு மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசிய உணவு வழங்கப்படும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.”என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மைதங்கிய மிகொசி ஹிதேகி தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பின்மை இன்னும் அதிக அளவில் இருப்பதாக WFP இன் அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஒவ்வொரு 10 குடும்பங்களிலும் ஏழு பேர், புரதம் மற்றும் பால் போன்ற சத்தான உணவைக் குறைப்பது அல்லது உணவை முற்றிலுமாகத் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதாக அது தெரிவிக்கின்றது.

“பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களும் குழந்தைகளுமே எங்களின் மிகப் பெரிய கவலையாகும்” என WFP இலங்கையின் பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக்கி கூறினார்.

“பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்தைப் பெறும் வகையில் எங்கள் முயற்சிகளை அளவிடுவதற்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.ரூஙரழவ் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பான் நாடானது இலங்கை அரசாங்கத்திற்கும் றுகுPக்கும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீண்டகாலமாக நன்கொடை அளித்து வருகிறது, அவசரநிலைகளில் முக்கியமான உதவிகளை வழங்குகிறது. அதே நேரத்தில் நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால மீட்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.

ஜப்பானின் சமீபத்திய நிதியுதவியானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்காக இலங்கை மக்களுக்கு அதன் ஆதரவின் விரிவாக்கமாகும்.

WFPஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது அவசரச் செயல்பாட்டைத் தொடங்கியதில் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவி மூலம் 3.4 மில்லியன் மக்களை அடையும் இலக்கை நெருங்கி வருகிறது.

ஜப்பானிய தூதரக அதிகாரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தார்

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி ஹனா ,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டார் ஜெல்சின், உபதலைவர் இரா தர்ஷன், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வடக்கு கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு , அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் , மகாவலி அபவிருத்தி திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினை,தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அரச அடக்குமுறைகள் என பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார சேவைக்காக 38 மில்லியன் டொலர்களை வழங்கியது ஜப்பான்

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த உதவி கிடைப்பதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருளை குறிப்பாக டீசல் கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் நிதி வழங்கவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்றாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வரவேற்றுள்ளார்.

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஜப்பானிடம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின்  இரண்டாவது டேர்மினலை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானிடம் ஒப்படைக்கவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கியுடனான சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்காக ஜப்பான் அளித்த ஆதரவிற்காக நன்றி உடையவராக விளங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியானதும் இரண்டாவது முனைய பணிகள் ஆரம்பமாகும் என ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.