இலங்கை நண்பனான சீனாவுடன் இணைந்து செயற்படும் – அலி சப்றி

இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இலங்கை நண்பனான சீனாவுடன் இணைந்து செயற்படும் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இலங்கையின் வலுவான உறவு அதன் நாகரீகத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளிற்கும் இலங்கை தனது மண்ணில் அனுமதியளிக்காது என தெரிவித்தார் என டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

இந்தியா கவலைப்படவேண்டிய அவசியமில்லை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானது அது எங்கள் நாகரீகத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ள அலிசப்ரி எங்கள் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலுடனும் நாங்கள் ஈடுபடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவும் எங்கள் நண்பன்  நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எனினும் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பு ஏற்படாது இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் இதனை தெளிவாக  தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் குடும்ப பிணைப்பை போன்றவை பிரச்சினைகள் எழும்போது அவற்றிற்கு குடும்பத்திற்குள் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.