சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

கடந்த 13 ஆம் திகதி சர்வகட்சித் தலைமைகளை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ்த் தேசியம் சார்ந்த நான்கு கட்சி தலைவர்கள் இணைந்து மூன்று கோரிக்கைகளை கொடுத்து அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கால எல்லையாக 2023 ஐனவரி 31 வரை வழங்கிவிட்டு அதற்கு முன்பாக மீண்டும் இன்று 21/12/2022 சம்பந்தன் ரணிலை சந்திப்பதற்கான தீர்மானத்தை தமிழரசுக் கட்சி தனித்து எடுத்திருப்பது ரணில் அரசை காப்பாற்றவா?
ஏனைய கட்சிகளுடன் இணைந்து எடுத்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவா? தமிழர்களை பலவீனப்படுத்தி தோற்கடித்த எரிச்சொல்ஹெமின் தலைமையில் பேசவா? தமிழ் மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பலவீனப்படுத்தவா? என வினவியுள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ்.